Sunday 24 April 2022

Ramadan period foods!!!!!

  
உலகெங்கிலும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள், மேலும், ரமலான் மாதம் நோன்பு நோற்கிறார்கள்.

 உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை (ஆம் - தண்ணீர் கூட) சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையோ தவிர்க்கும் வருடாந்திர மாதத்தைக் குறிக்கிறது.


ரமலான் நோன்பு மாதத்தில், காலை வேளையில், திட மற்றும் திரவ உணவுகளை நாம் தொடர்ந்து தவிர்த்து வரும் பட்சத்தில், நமது உடலில் தீவிர தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன்காரணமாக, நமது உடலின் முக்கிய செயல்பாடுகளில் கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதிக வெப்பநிலை, கடுமையான பணிகள் உள்ளிட்டவைகளின் காரணமாக, ஒருநாளில் நமது உடலில் நீர் இழப்பு ஏற்பட்டால், அதை சரி செய்யவே, நமக்கு சில நாட்கள் தேவைப்படும் நிலையில், ஒரு மாத கால அளவிற்கு காலை வேளையில், திட மற்றும் திரவ உணவு வகைகளை தொடர்ந்து தவிர்த்து வரும் பட்சத்தில், அது நமது உடலில் பெரிய அளவிலான நீர் இழப்பினை ஏற்படுத்தி விடுகிறது. இதன்காரணமாக, நமது உடல் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.

ரமலான் நோன்பு காலத்தில் நாம் விரதம் இருக்கும்போது, நமது உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, நாம் உணவு வகைகளில் போதிய கவனம் செலுத்த வேண்டும். 

Date fruits




   ஏராளமான நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்த ஆதாரமான பேரீச்சம்பழங்கள், புனிதமான பழங்களைக் கொண்டு நோன்பு நோற்குமாறு சக முஸ்லிம்களுக்கு நபிகள் நாயகம் அறிவுறுத்தியதிலிருந்து ரமலான் அட்டவணைகளின் முக்கிய உணவாக உள்ளது.
சுவையாக இருப்பதைத் தவிர, பேரீச்சம்பழங்கள் உண்மையிலேயே ஒரு நிவாரண இருப்பு, குறிப்பாக உண்ணாவிரதத்திற்கு வரும்போது. அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கத்திற்கு நன்றி, இது இவ்வளவு சிறிய அளவில் அதிக ஆற்றலைப் பெறுகிறது, அவை காலியான கார்போஹைட்ரேட் கடைகளை விரைவாக புதுப்பிக்கவும், சர்க்கரை பசியை அடக்கவும், இதனால் நாள் முழுவதும் உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
 நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான பேரீச்சம்பழம்,
நன்றாக, தண்ணீரை ஈர்க்கும் இந்த நார்ச்சத்து, வயிற்றின் திரவத்தை அதிகரிக்கிறது, எனவே அது வயிற்றில் செலவழிக்கும் நேரத்தை நீடிக்கிறது மற்றும் முழுமை உணர்வை வழங்குகிறது.

Fruit juices



வீட்டிலேயே சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மட்டுமே, கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க உதவும். பெரிய பெரிய தொழிற்சாலைகளில் வியாபார நோக்கத்தில் இயற்கை பழங்கள் இல்லாமல், செயற்கை பொருட்களான எசன்ஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படும் செயற்கையான பழச்சாறுகளில், உள்ள அதிகப்படியான சர்க்கைரயால், நமது உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும். ஆனால், இந்த பானங்களில் சோடியம் மற்றும் பொட்டாசியம் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால், இது வயிறு சம்பந்தமான பல்வேறு உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.





Cheese lumps



அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 100 கிராம் பாலாடையில், 90.8 கிராம் அளவிற்கு நீர் உள்ளது.
 பாலை காட்டிலும், பாலாடையில் அதிகளவில் நீர் உள்ளது. இது உடலில் ஏற்படும் நீர் இழப்பை கட்டுப்படுத்துகிறது. கோடை காலத்தில், பாலாடையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம், உடலில் ஏற்படும் நீர் இழப்பை கட்டுப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாது, உடலின் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்கவும் உதவுகிறது. ரமலான் மாதத்தில், நோன்பு இருப்பவர்களுக்கு, பாலாடை இனிய வரப்பிரசாதமாக விளங்கிவருகிறது என்றால் அது மிகையல்ல..


Watermelon




தர்பூசணி பழத்தில், 92 சதவீதம் அளவிற்கு நீர் நிறைந்து உள்ளது. இதுமட்டுமல்லாது, இதில் 100 கிராம் அளவிற்கு லைக்கோபீன், சிட்ருலின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன. வைட்டமின் பி 1 மற்றும் வைட்டமின் பி6 உள்ளிட்ட வைட்டமின்களும், மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட மினரல்களும் உள்ளன. தர்பூசணி பழத்தில் உள்ள அதிகப்படியான தண்ணீர் மற்றும் மினரல்கள், உங்கள் உடலின் எலக்ட்ரோலைட்ஸ்களின் அளவை பராமரித்து, உடலில் நீர் இழப்பு ஏற்படாதவண்ணம் பாதுகாக்கின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 100 கிராம் தர்பூசணி பழத்தில், 91.45 கிராம் அளவிற்கு நீர் உள்ளது.
 

Cucumber



வெள்ளரிப் பழத்தில், பொட்டாசியம், போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. வெள்ளரிப் பழம், நமது சருமத்தை மிருதுவாக்கப் பயன்படுவது மட்டுமல்லாது, கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கப் பயன்படுகிறது. வெள்ளரிப் பழத்தில் காணப்படும் முக்கியமான மினரலான சிலிக்கா, கால், கை மூட்டுக்கள், தசைகள், எலும்புகள், லிகமெண்டுகளில் உள்ள இணைப்புத் திசுக்களை வலுவாக கட்டமைக்க உதவுகிறது. வெள்ளரிப் பழத்தில் உள்ள அதிகப்படியான நீர், ரமலான் நோன்பு இருப்பவர்களுக்கு, அதிக நீர் இழப்பு ஏற்படாமல் காக்கப்  பயன்படுகிறது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 100 கிராம் வெள்ளரி பழத்தில், 95.23 கிராம் அளவிற்கு நீர் உள்ளது.


Tomato



தக்காளிப் பழத்தில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, நமது உடலில் நீர்ச்சத்து ஏற்படாவண்ணம் காக்கிறது. கோடைகாலத்தில், தக்காளிப் பழம் சிறந்த உணவாக விளங்குகிறது. ரமலான் நோன்பு மாதத்தில் விரதம் இருப்பவர்கள், தக்காளிப் பழத்தை அதிகளவில் பயன்படுத்தி வந்தால், அவர்களது உடலில் இருந்து நீர் இழப்பு தடுக்கப்படுவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. தக்காளிப் பழத்தில் உள்ள லைகோபீன் ஆன்டி ஆக்சிடண்ட், நமது உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 100 கிராம் தக்காளிப் பழத்தில், 94.78 கிராம் அளவிற்கு நீர் உள்ளது.


Ramalan Nonpu Kanji



ரமலான்  என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் இந்த நோன்பு கஞ்சியானது மசூதிகளில்அதிகஅளவில்செய்யப்பட்டு,அனைவருக்கும் கொடுக்கப்படும். 

Samosa



  சோமாலியாவைச் சேர்ந்த சம்புசா - இறைச்சி, வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு வறுத்த பேஸ்ட்ரி - இது ரமலான் பிரதான உணவாகும்.

சாம்புசாக்கள் மஞ்சள், சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றின் சுவைகளால் நிரம்பியுள்ளன, மேலும் அவற்றின் வறுத்த, மாவு போன்ற வெளிப்புறமானது 14 மணிநேர உண்ணாவிரதத்திற்குப் பிறகு வயிற்றை நிரப்புவதற்கு ஏற்றது.

இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டது, இலகுவான மாவைக் கொண்டது மற்றும் பொதுவாக பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் சைவக் கலவையைக் கொண்டிருக்கும் ஒரே மாதிரியான சுவை மற்றும் சத்தம் கொண்ட சமோசாவை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் - சம்புசா சோமாலி குடும்பங்களில் ஆண்டு முழுவதும் அனுபவிக்கப்படுகிறது, 


    




No comments:

Post a Comment

  ஆரோக்கியமான வாழ்க்கை முறை 6 குறிப்புகள் www.lankanvoice.lk   வியாழன், மார்ச் 10, 2022   நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக, நமக்கு 40க்கும் அதிகம...